WELCOME

வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றியதகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

Thursday, January 5, 2012

மாப்புக் கேட்டல்


மாப்புக் கேட்டல்

மாப்புக் கேட்டல்


அய்யா நாங்கள்
அறிந்து அறியாமல் செய்ததெல்லம்
அய்யா பொறுக்கனும்.
                                                                 (5 முறை சொல்லவும்)
அய்யா பொறுத்து
அய்யா மாப்புத்தந்து
அய்யா வைத்து ரெட்சிக்கனும்
அய்யா பொருமை தரனும்

அய்யா நாங்கள்,
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு
ஒண்ணுல் கொண்ணு
நிரப்பாயிருக்கணும்.

அய்யா நல்ல புத்தி தரனும்!
அய்யா அன்னமும் வஸ்திரமும் தந்து
அய்யா எங்களை,
யாதொரு நொம்பலம் இல்லாமல்
யாதொரு சஞ் சலம் இல்லாமல்
அய்யா வைத்து ரெட்சிக்கணும்!

அய்யா   உண்டு

No comments:

Post a Comment