WELCOME

வருகைக்கு நன்றி!

அய்யாவின் அன்புகொடி மக்களுக்கு அன்பான வணக்கங்கள்...
இந்த இணையத்தளம் மூலமாக தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

"ஏரணியுமாயோன் இவ்வுலகில்தவசு பண்ணி
காரணம்போல்செய்தகதை கட்டுரைக்க பூரணமாய்
ஆராய்ந்துபாட அடியேன்சொல்தமிழ்க்குதவி
நாராயணர்பாதம்நாவினில்"

என்னும் அகிலத்தின் வரிகளை மனதில் கொண்டு இப்பகுதியை வைகுண்டர் பாதத்தில் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அன்பர்களே இப்பகுதியில் உங்கள் பங்கும் முக்கியமானதாகும், எனவே உங்கள் கருத்துக்கள்,அய்யாவை பற்றிய செய்திகள் ,உங்கள் ஊரில் உள்ள தாங்கல்கள் பற்றியதகவல்களை எங்களுக்கு தந்து உதவுங்கள்.

அய்யா உண்டு

Thursday, January 5, 2012

தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்.


தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்.


தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணற்றின்" சிறப்புகள்.
பதிகளில் தலைமைபதியாக திகழும் சுவாமிதோப்பு பதியில் அமைந்துள்ள முத்திரிகிணற்றை வைகுண்ட அய்யா ஏற்படுத்தினார். அக்கிணறு பல்வகை சிறப்புகளை உடையது.

"முத்திரிகிணற்றின்" தோற்றம்:
பழங்காலத்தில் பொதுகிணற்றில் நீர் எடுப்பதற்க்கும் குளிப்பற்க்கும் மக்கள் சிலருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற தூய எண்ணம் கொண்ட வைகுண்ட அய்யா "முத்திரிகிணற்றை" தன் பதிகளில் ஏற்படுத்தினார். பக்தர்கள் புனிதமாகவும், நோயின்றி வாழவும் அய்யா ஏற்படுத்திய கிணறு "முத்திரிகிணறு" ஆகும்.

வைகுண்ட அய்யாவின் முன்னேற்றத்தில் பொறாமை கொண்ட கலிநீசர்கள் வைகுண்ட அய்யா ஏற்படுத்திய கிணற்றில் நஞ்சை ஊற்றி கொல்ல முயன்றனர். அய்யா வைகுண்டர் "பால்" என்று  அருந்துபவர்களுக்கு "பாலாகவும்"; "நஞ்சு" என்று நினைப்பவர்களுக்கு "நஞ்சாக" இருக்கும் என்று கூறினார். பக்தர்கள் "சிவ சிவ அரகரா" பாடி அந்த முத்திரிபதத்தை அருந்தியதால் அது அவர்களுக்கு இனிய அமிர்தமாக தித்தித்தது.

வழிபடும் முறை:
தலைமைபதியில் அமைந்துள்ள "முத்திரிகிணறு" பல்வேறு சிறப்புகளை உடையது. அதனால் பதிக்கு செல்லும் முன்னர் பக்தர்கள் பதம் இட்டு(குளித்து); பதத்தை அருந்தி; அந்த முத்திரிகிணற்றை ஐந்துமுறை "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்ற வைகுண்ட அய்யாவின் திருநாமத்தை உச்சரித்து சுற்றி சேவித்த பின்னர் பதிக்கு செல்ல வேண்டும்.

"முத்திரிகிணற்றின்" சிறப்புகள்:
முத்திரிகிணறு ஓர் அதிசய கிணறு. முத்திரிகிணற்றில் பதம் இடுபவர்களுக்கு பாற்கடலில் தீர்த்தமாடுவது
 போல் தோன்றும். கங்கை ஆற்றில் நீராடினால் பாவவினைகள் தீறும் என்பது ஐதீகம். அதனினும் மேலான பலனைத் தரவல்லது இந்த தெச்சணத்தில் அமைந்துள்ள முத்திரிகிணற்றின் தீர்த்தமாகும். முத்திரிகிணற்றின் தீர்த்தத்தை குடிப்பவர்கள் அமுத்தத்தை அருந்துவது போன்ற எண்ணத்தை பெருவார்கள். அதை அருந்திய பிறகு மனதில் உள்ள மாசுகள் நீங்கி தூய்மையான உள்ளத்தை பக்தர்கள் அடைவர். அதன் பிறகு வழிபடும் பொழுது பக்தர்களின் மனதில் வைகுண்ட அய்யாவை பற்றிய எண்ணங்களே தோன்றும். பக்தர்களின் உடலும் உள்ளமும் தூய்மையடைடும்.

பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் தீர்த்தமாக "முத்திரிபதம்" திகழ்கிறது. உடல் நோய்கள், தோல் நோய்கள், உடல் வலிகள் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஓர் அற்ப்புத் தீர்த்தமாக விளங்குகிறது. உடல் நோய்கள் மட்டுமல்லாது உளநோய்களையும் குணப்படுத்தி பக்தர்களின் துன்பங்களை அகற்ற வல்லது. இத்தகைய சிறப்புகள் உடைய முத்திரிகிணற்றில் அன்பர்கள் தங்களின் வாழ்வு மேன்மை அடையும். இத்தகைய சிறப்புகளை உடையது "முத்திரிகிணறு" அனைவரும் வருக, பதம் இடுக அய்யாவின் அருள் பெருக!

அய்யா உண்டு!

No comments:

Post a Comment